முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ளில் அரசியல்

நேற்று ஒரு புத்தகம் படித்தேன். புத்தகத்தின் பெயரே வித்தியாசமானது.    
 "அ-சுரர்களின் அரசியல்". ஆசிரியர் ரவிக்குமார். 40 பக்கங்கள் மட்டுமே கொண்ட மிக எளிய நூல்.  ஆசிரியர் ஒரு கருத்தரங்கில் பேசிய உரைதான் இந்த நூல். அரை மணி நேரத்தில் படித்து விடலாம். ஆனால், படிக்கும்போதும் படித்த பின்பும் நம்மை சிந்திக்க வைக்கும் செய்திகளைக் கொண்டுள்ளது. 

ஆசிரியர் இந்நூலில் சொல்லும் சில முக்கியமான செய்திகள் இவை:
  1. சுரர் என்பவர் வைதீகர்கள்.  அ-சுரர் என்று புராணங்களில் கொடூரமாக சித்திரிக்கப்பட்டவர்கள்  ஆதிகால பௌத்தர்கள்.
  2. இந்த அசுரர்கள் பஞ்சமா பாதகங்களான கொலை, களவு, பொய், கள் அருந்துதல், குரு நிந்தை ஆகியவற்றை செய்யாதவர்கள். அதை ஒதிக்கியவர்கள். அதற்கு எதிராக பிரச்சாரமும் செய்தவர்கள்.
  3. பிற்காலத்தில் நடந்த அரசியல் சூழ்ச்சியால் இவர்களை வர்ணக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி சூத்திரர்களாக ஒதிக்கிவிட்டனர் வைதிகர்கள். இந்த அசுரர்களே இன்றைய தலித்கள்.

தலித்களை வைத்து இன்று எவ்வாறு அரசியல் செய்யப்படுகிறது என்று ஆராய்கிறார் ஆசிரியர். நாமெல்லோரும் மது அருந்துவதைப் பற்றியும் புகைப் பிடிப்பதைப் பற்றியும் தான் அதிகம் பேசுகிறோம். கள் உண்ணுவதைப் பற்றி பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும், கள் உடலுக்கு நல்லது, அது ஆதிகாலத்திலிருந்து நம்மக்கள் பயன்படுத்திய இயல்பான ஒரு பானம் என்றுதான் பேசுகிறோம். இதை ஆசிரியர் முற்றிலும் மறுக்கிறார். 

கள்ளுக்கடை திறப்போம் என்று தமிழக அரசியல் கட்சிகள்(குறிப்பாக விஜயகாந்த்) கொடுக்கும் வாக்குறுதி மக்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை விளைவிக்கும் என்று சான்றுகளோடுச் சொல்கிறார். அது ஏழை மக்களின் பொருளாதாரத்தை எந்த வகையிலும் முன்னேற்றி விடாது என்றும் சொல்கிறார். 

சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார் ஆசிரியர்.

  • கள்ளுக்கடைகள் ஏன் சேரிப் பகுதிகளில் மட்டும் அதிகம் இருக்கின்றன?
  • கள்ளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் யார்?
  • தலித் தலைவர்கள் ஏன் கள்ளை எதிர்க்கின்றனர்?
  • கள் போதை பொருள் இல்லையென்றால், அக்கால மக்களுக்கு உடல் வலுவைத் தந்திருந்தால் வள்ளுவர் ஏன் 2000 ஆண்டுகளுக்கு முன்பே "கள்ளுண்ணாமை"யை வலியுறுத்தி தனி அதிகாரம் படைத்துள்ளார்?
  • கள்ளுக்கடைகளையும் கள் இறக்க பயன்படுத்தப்பட்ட தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்திய பெரியார் வாழ்ந்த தமிழகத்தில் மீண்டும் கள் வேண்டும் என்று பேசும் கட்சிகள் என்ன அரசியல் நோக்கம் கொண்டுள்ளன?
இவ்வாறு 40 பக்கங்களில் நிறைய பேசியிருக்கிறார். கள் பற்றிய நம் கருத்தை மீள் பரிசோதனை செய்யவும் வைத்துள்ளார். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...