முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழநி ஆண்டியும் தெரு ஆண்டியும் - 2

பழநி மலையின் படிக்கட்டுகளில் நானும் நண்பர்களும் ஏறத் தொடங்கினோம். பழநிக்கு செல்வது அதுதான் எனக்கு முதல்முறை. ஒரே கூட்டம். நாங்கள் போனபோதுதான் கூட்டமா என்றால் எப்போதுமே அப்படித்தானாம். படிகளில் ஏறிக்கொண்டே நண்பன் ஒருவனை பகடி செய்தோம். அவன் உடுமலைக்கு வருவதற்கு முன்பே இங்கே வந்து ஒரு தரிசனம் போட்டுவிட்டுதான் வந்திருக்கிறான். உடுமலையில் அவன் அதிகம் செலவு செய்யவில்லை. ஏன் என்று கேட்டபோது, தன் செருப்பை பாதுகாப்பதாகவும், சிறப்புப் பிரசாதம் தருவதாகவும் ஒரு கடையிலிருந்த தம்பதி சொல்லியிருக்கின்றனர். சொன்னார்கள் என்று சொல்வதை விட நம்ப வைத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். நண்பனும் அவர்களை 'நம்ம்ம்ம்ம்ம்பி' செருப்பை விட்டு உள்ளே சென்று தரிசனம் முடித்து வந்து செருப்பை எடுத்திருக்கிறான். அவர்கள் சொன்னபடியே பிரசாதமும் கொடுத்தனர். வாங்கிய நண்பன் எவ்வளவு என்று கேட்டுக்கொண்டே 50ரூ நோட்டை எடுத்தபோது அவர்கள் 430ரூ என்றிருக்கின்றனர். நண்பனின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இவ்வளவா என்று வாய் பிளந்து கேட்டவனுக்கு 'சாமிக்கு செய்ய கணக்குப் பாக்காதீங்க' என்று பதில் சொல்லி 430ரூபாயை வாங்கிக்கொண்டு நண்பனை ஆண்டியாக்கி விட்டனர். 'சரி, 430ரூ மதிப்புள்ள பிரசாதம் இருந்தாலாவது மனதைத் தேற்றிக் கொள்ளாலாமென்றால் உள்ளே இரண்டு விபூதிப் பொட்டலம் மட்டுமே இருந்திருக்கிறது. இந்த சம்பவத்தைச் சொல்லிதான் நாங்கள் அவனை பகடி செய்தோம். அதற்கும் அவன் மீசையில் மண் ஒட்டாதவன் போல் 'என்னிடமிருந்து சாமி இதை எடுத்துகிச்சுனா, எனக்கு வேற எதோ தரப்போகுதுனு அர்த்தம்' என்றான். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. (உபரித் தகவல்: நண்பனின் ரயில் டிக்கட்டை நாங்களே எடுத்து அவனை ஊருக்குக் கூட்டி வந்தோம்.) 
இடையிடையே ஓட்டப்பந்தயம் வைத்து வேகமாக படிகளில் ஏறி எங்களுக்கு விளையாட்டு காண்பித்தனர் வேறு இரண்டு நண்பர்கள். மலை மீதும் பயங்கர கூட்டம். இருட்டி விட்டிருந்தது. விளக்கொளியில் கோவில் பளிச்சென்றிருந்தது. நீண்ண்ண்ண்ண்ட வரிசையில் பக்தர்கள் கூட்டம். நாங்களும் காத்திருந்தால் அன்றைய இரவு ரயிலைப் பிடிக்கமுடியாது என்பதறிந்தோம். வெகு நேரம் காத்திருக்க முடியாது. எனவே, கொஞ்ச நேரம் காத்திருந்து பொங்கல் வாங்கிச் சாப்பிட்டோம். அங்கேயிருந்த தண்ணீர் தொட்டியில் மாட்டியிருந்த தம்ளரை எடுத்து குழாயைத் திறந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது.....ஒரு குரங்கு. அலைபேசியில் காணொளி எடுத்தோம். குரங்குகளுக்கு அறிவில்லை என்று யார் சொன்னது? 

அதை வியந்துகொண்டே, ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டே கோவிலைச் சுற்றி வந்தோம். மலை மீது ஏறியும் ஆண்டியைப் பார்க்க முடியவில்லையென்றாலும் நண்பனின் வடிவில் பார்த்து விட்டோம். முன் வாசலுக்கு வந்தோம். அங்கேதான் எதிர்பாராத ஒன்றைப் பார்த்தோம். என்னது அது? ?
 - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...