முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2020இல் வாசிப்பும் நானும்

            இந்த ஆண்டு தொடக்கத்தின் போது 365 நூல்களை வாசிக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டேன். ஆனால் மிக மிகக் குறைவாக வாசித்த ஆண்டாக இந்த ஆண்டு இருந்தது என்பதுதான் விநோதம். மொத்தம் வெறும் 87 நூல்கள் மட்டுமே வாசித்திருக்கிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு என் வாசிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு மேதகு ஐயா கொரோனா அவர்கள்தான் காரணம். பெருந்தொற்றுக் காலம் கிடைத்தற்கரிய நேரத்தை அனைவருக்கும் வழங்கியது. நிச்சயம் முந்தைய ஆண்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமாக வாசித்திருக்கலாம். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் அதிகம் வாசிப்புக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. திரைப்படங்கள் அதிகம் பார்க்கத் தொடங்கியதும் முக்கியக் காரணம். பெரும்பாலும் தமிழ் நூல்களே வாசித்திருக்கிறேன் (ஆங்கிலத்தில் வாசித்த ஒன்றிரண்டு நூல்களை கணக்கில் எடுப்பதே தகாது). “வாசிப்பு மாரத்தான்” என்று எனக்கு நானே போட்டி போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு நாளொன்றுக்கு ஒரு முழு நூலை வாசிக்க முயன்றேன். அதில் பெரும்பாலும் வெற்றியும் அடைந்தேன். புனைவு நூல்களே அதிகம்; அபுனைவு நூல்கள் குறைவு தான். எனினும் சில முக்கியமான நூல்களை இந்த ஆண்டு வாசித்திருக்கிறேன். 2021இல் அதிகம் வாசிக்க முயல வேண்டும்!

2020இல் வாசித்த நூல்களின் பட்டியல்:

1. ஆடுகளம் - என். சொக்கன்
2. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
3. காயத்ரி - சுஜாதா
4. கனவு தொழிற்சாலை - சுஜாதா
5. 24 சலனங்களின் எண் - கேபி
6. காதல் வனம் - தேனம்மை லக்ஷ்மணன்
7. சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்
8. The Girl in Room 105 - Chetan Bhagat
9. பொன்னியின் செல்வன் (5 பாகங்கள்) - கல்கி
10. யவன ராணி (2 பாகங்கள்) - சாண்டில்யன்
11. நந்தலாலா - மாலன்
12. ஃபாசிஸ்மும் படைப்பாளிகளும் - ரவிக்குமார்
13. பணம் பத்திரம் - செல்லமுத்து குப்புசாமி
14. எதிர்சொல் - பாரதி தம்பி
15. ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும் - ஜெயகாந்தன்
16. கங்கை எங்கே போகிறாள் - ஜெயகாந்தன்
17. ஒடலு - சாரா
18. ஒரு நாள் - க. நா. சுப்ரமணியம்
19. திலக்கியா -பிரவீன்குமார்
20. சாமான்ய மனிதனின் எதிர்க்குரல் - விஜய் மகேந்திரன்
21. இடைவெளி - சம்பத்
22. வரலாறும் வக்கிரங்களும் - ரோமிலா தாப்பர்
23. ஆச்சர்யம் ஆனால் உண்மை - ராஜேஷ் குமார்
24. கூகுள் - என். சொக்கன்
25. படைப்புகளின் உரையாடல் - ஜோ டி குரூஸ்
26. கல்மரம் - சுநீல் கிருஷ்ணன்
27. மறக்கவே நினைக்கிறேன் - மாரி செல்வராஜ்
28. பாரதியும் பாப்பாவும் - பெ. தூரன்
29. பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - பா. ராகவன்
30. அயோத்தி தாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும் - வே. வெங்கடாசலம்
31. பிரியத்தின் துன்பியல் - சி. சரவண கார்த்திகேயன்
32. பிரயாண நினைவுகள் - ஏ. கே. செட்டியார்
33. இந்தியனும் ஹிட்லரும் - பம்மல் சம்பந்த முதலியார்
34. வாசிப்பது எப்படி? - செல்வேந்திரன்
35. RSS: வரலாறும் அரசியலும் - பா. ராகவன்
36. திருப்பி அடிப்பேன் - சீமான்
37. இளமையில் கொல் - சுஜாதா
38. மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
39. மலை மாளிகை - சுஜாதா
40. மனிதன் மாறிவிட்டான் - இறையன்பு
41. மேலும் ஒரு குற்றம் - சுஜாதா
42. மாயா - சுஜாதா
43. கொலை அரங்கம் - சுஜாதா
44. அப்சரா - சுஜாதா
45. கருப்பி - அருணா ராஜ்
46. இந்தியக் கல்வியின் இருண்ட காலம்? புதிய கல்விக் கொள்கை குறித்த கட்டுரைகள்
47. ஒவ்வொரு கூரைக்கும் கீழே - ஜெயகாந்தன்
48. கலாச்சார இந்து - ஜெயமோகன்
49. பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா
50. உறுதி மட்டுமே வேண்டும் - சோம. வள்ளியப்பன்
51. ஞானபீடர் - யுகபாரதி
52. காந்தி யார் - வே. சாமிநாத சர்மா
53. விவேக், விஷ்ணு கொஞ்சம் விபரீதம் - ராஜேஷ்குமார்
54. நாம் ஏன் உடற்பயிற்சிகளை கைவிடுகிறோம்? அதிசா
55. பாரதி கட்டுரைகள் - தத்துவம் - பாரதியார்
56. Do It Today - Darius Forex
57. அறியப்படாத தமிழ் மொழி - KRS
58. இரவல் காதலி - செல்லமுத்து குப்புசாமி
59. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
60. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - தமிழ்மகன்
61. பாலை நிலப் பயணம் - செல்வேந்திரன்
62. உறைப்புளி - செல்வேந்திரன்
63. கனவுகளின் நடனம் - சாரு நிவேதிதா
64. இட ஒதுக்கீடு - நலங்கிள்ளி
65. நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - இறையன்பு
66. அமுல் - ஒரு வெற்றிக்கதை - சொக்கன்
67. மனதோடு ஒரு சிட்டிங் - சோம. வள்ளியப்பன்
68. காதல் முதல் திருமணம் வரை - சோம. வள்ளியப்பன்
69. சங்கர் முதல் ஷங்கர் வரை - தமிழ்மகன்
70. ஊர்வன - பா. ராகவன்
71. வாலிப வார்த்தைகள் - யுகபாரதி
72. அம்பேத்கர் - ஆர். முத்துக்குமார்
73. குடுமி பற்றிய சிந்தனைகள் - ராபர்ட் கால்டுவெல்
74. தோள் சீலை போராட்டம் - கொல்லால் எஸ் ஜோஸ்
75. தெருவாசகம் - யுகபாரதி
76. இசை அல்லது இளையராஜா - யுகபாரதி
77. சாதிகளின் உடலரசியல் - உதயசங்கர்
78. பாரதிக்கும் எனக்கும் பழக்கம் - வ. உ. சி
79. நடைவண்டி நாட்கள் - யுகபாரதி
80. பட்டிமன்றமும் பாப்பையாவும் - சாலமன் பாப்பையா
81. கற்றுக்கொண்டால் குற்றமில்லை - பாலகுமாரன்
82. இடப்பக்க மூக்குத்தி - சுரேஷ்குமார் இந்திரஜித்
83. மகாகவி பாரதி சர்ச்சை - வ ராமசாமி & கல்கி
84. முன்னுதாரண முதல்வர் - யுகபாரதி
85. தோழமை எனும் தூய சொல் - யுகபாரதி
86. கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன்
87. இரவு - ஜெயமோகன்
Image may contain: one or more people, text that says 'AREADER LIVES ATHOUSANDLIVES'

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...