விவசாயப் பொருளாதாரம் பற்றி வள்ளுவர்: வளர்ந்த நாடுகளில் 10% மக்களும் வளரும் நாடுகளில் 60% மக்களும் தங்களின் வாழ்க்கையை வேளாண்மை மூலமே நடத்தி வருகின்றனர். 14 இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது விவசாயம் தான். 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 58% வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் தான் உள்ளன. மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (CSO) 2011 கணக்கெடுப்பின் படி நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையும் அது சார்ந்த தொழிகளும் 14.2% இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 15 பல நாடுகளில் பெரிய பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. ஆனால், அவை வேளாண்மைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. இந்தியா இயற்கையால் வரமளிக்கப்பட்ட நாடு. இங்கே 62% நிலம் வேளாண்மை செய்வதற்கு ஏற்ற நிலமாக இருக்கிறது. 11 உழவுக்கு இன்றியமையாத தேவை நீர். முறையான பாசன வசதி இருந்தால்தான் நல்ல விளைச்சல் தர முடியும். நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாள்பவர்களுடையது. உழவர்களுக்குச் சிறந்த பாசன வசதி செய்து கொடுக்கும் மன்னர்களையே வரலாறு பேசும். கல்லணை கட்டிய கரிகாலனைத் தான் உலகம் இன்று வரை போற்றுகிறது. ...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!