முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக நண்பர்களோடு நான்கு நாள்

சென்னை புத்தகத் திருவிழாவுக்கு இதுவரை நான் சென்றதில்லை. ஆனால், போகவேண்டும் என்ற ஆசை மட்டும் காதல் மிகுதியால் கசிந்துருகி பசலை நோய் வந்த சங்க காலத் தலைவி போல் எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. நம் ஊரில் இப்படி ஒன்று எப்போது நடக்கும் என்று நான் எதிர்பார்த்த ஒன்று இப்போது நடந்திருக்கிறது. ஆம். தஞ்சையில் முதன்முறையாக பெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஜூன் 12 முதல் 21 வரை.  முதலில், இதை முன்னெடுத்து நடத்திய தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர். சுப்பையன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். திரு. சுப்பையன் பொறுப்பேற்ற பிறகு மிக முக்கியமான இரண்டு பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவை வெற்றியும் கண்டுள்ளன. ஒன்று - தஞ்சை மாவட்டம் முழுதும் 12 மணி நேரத்தில் 12 லட்சம் மரக்கன்றுகள் நட்டு அதை ஒரு கின்னஸ் சாதனைக்காக முயன்றார். என் தெருவில் கூட 12 மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன. இரண்டாவது - இத்தனை ஆண்டு காலம் இல்லாத ஒரு திருவிழாவை முதன் முறையாக நடத்தியிருக்கிறார்.   120 ஸ்டால்களில் பெரும் புத்தகக் கண்காட்சி.  தஞ்சையின் சரஸ்வதி மகால் நூலகம் உலகப் பெயர் பெற்றது. அதனருகே, அரண்மனை வளாக மை...

பழநி ஆண்டியும் தெரு ஆண்டியும் - 3 (இந்துக்கள் மட்டும் உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள் )

அந்த எதிர்பாராதது, ஓர் அறிவிப்பு பலகை. பக்தர்களுக்கு. "இந்துக்கள் மட்டும் உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள்" என்று நீல வண்ண பலகையில் வெள்ளை எழுத்துகளில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சி. நண்பன் ராகவனை அழைத்துக் காண்பித்தேன். உடனே, புகைப்படம் எடுக்கச் சொல்லி இதைக் கண்டித்து எழுதச் சொன்னான். அப்போது எனக்குள் சில...அல்ல அல்ல...பல கேள்விகள் எழுந்தன. 2014ல் கூட இப்படி ஒரு அறிவிப்பா? இந்தியா உண்மையிலேயே மதச் சார்பற்ற நாடா? பெரியார் விதைத்த விதை கனி தராமல் போய்விட்டதா? இப்படியெல்லாம் நினைத்து குழம்பிக்கொண்டே படிகளில் இறங்கினேன். சில தூரத்தில் ஒரு பலகை இருந்தது. இதுவும் அறிவிப்பு பலகை தான். ஆனால், இது பக்தர்களுக்கானது அல்ல. கடவுளுக்கானது. பக்தர்கள் தங்கள் கடவுள் பழநி முருகன் தங்கள் ஆசையை நிறைவேற்றச் சொல்லி காகிதத் துண்டுகளில் எழுதி ஒட்டி வைத்திருந்த கரும்பலகை. அங்கே போதிய அளவு வெளிச்சம் இல்லை. எனவே, படிப்பதற்குச் சிரமமாக இருந்தது. புகைப்படம் எடுக்கவும் தான். வெறுமனே வேண்டிக்கொண்டால் தங்கள் கோரிக்கையைக் கடவுள் மறந்து விடுவார் போலும். அதனால்தான், தாளில் எ...

பழநி ஆண்டியும் தெரு ஆண்டியும் - 2

பழநி மலையின் படிக்கட்டுகளில் நானும் நண்பர்களும் ஏறத் தொடங்கினோம். பழநிக்கு செல்வது அதுதான் எனக்கு முதல்முறை. ஒரே கூட்டம். நாங்கள் போனபோதுதான் கூட்டமா என்றால் எப்போதுமே அப்படித்தானாம். படிகளில் ஏறிக்கொண்டே நண்பன் ஒருவனை பகடி செய்தோம். அவன் உடுமலைக்கு வருவதற்கு முன்பே இங்கே வந்து ஒரு தரிசனம் போட்டுவிட்டுதான் வந்திருக்கிறான். உடுமலையில் அவன் அதிகம் செலவு செய்யவில்லை. ஏன் என்று கேட்டபோது, தன் செருப்பை பாதுகாப்பதாகவும், சிறப்புப் பிரசாதம் தருவதாகவும் ஒரு கடையிலிருந்த தம்பதி சொல்லியிருக்கின்றனர். சொன்னார்கள் என்று சொல்வதை விட நம்ப வைத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். நண்பனும் அவர்களை 'நம்ம்ம்ம்ம்ம்பி' செருப்பை விட்டு உள்ளே சென்று தரிசனம் முடித்து வந்து செருப்பை எடுத்திருக்கிறான். அவர்கள் சொன்னபடியே பிரசாதமும் கொடுத்தனர். வாங்கிய நண்பன் எவ்வளவு என்று கேட்டுக்கொண்டே 50ரூ நோட்டை எடுத்தபோது அவர்கள் 430ரூ என்றிருக்கின்றனர். நண்பனின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இவ்வளவா என்று வாய் பிளந்து கேட்டவனுக்கு 'சாமிக்கு செய்ய கணக்குப் பாக்காதீங்க' என்று பதில் ...

பழநி ஆண்டியும் தெரு ஆண்டியும் - 1

மு. கு: ஆண்டியை ஆண்ட்டி என்று படித்துவிடாதீர்கள். தலைப்பின் பொருளே மாறி விடும். பழநி சென்று வந்ததைப் பற்றி ஒரு பதிவு இடவேண்டுமென்று  நண்பன் வற்புறுத்தியதால் (ஆனாலும், நன்றி ராகவன்) பதிவது இது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் செமெஸ்டர் தேர்வுக்குப் பின் (எவ்வளவு நாளுக்குப் பிறகு எழுதுகிறேன்!!!) உடுமலையில் ஒரு பேப்பர் தொழிற்சாலையில் இன்-ப்ளான்ட் டிரெய்னிங் (தமிழில் என்ன என்று தெரிந்தவர்கள் சொல்லலாம் ) சென்றோம். பயிற்சியெல்லாம் நன்றாகத்தான் சென்றது. சீக்கிரம் முடிந்துவிட்டதால், கடைசி நாள் திருமூர்த்தி அருவிக்கும் பழநி கோவிலுக்கும் சென்று வர முடிவு செய்தோம். புறப்பாடு ஆயிற்று. காலை நேரமாகியதால் நகரப் பேருந்தின் கூட்டத்தைத் தாள முடியவில்லை. ஆங்கில எழுத்துகளைப் போல வளைந்து நிற்க வேண்டியிருந்தது. எப்படியோ திருமூர்த்தி மலைக்குச் சென்று சேர்ந்தோம். சிறிய அருவிதான் என்றாலும் குறைவில்லாமல் நீர் சுரந்தது; அல்லது பொழிந்தது. சிறு வயதில் ஒரே ஒரு முறை குற்றாலத்தில் குளித்திருக்கிறேன். அருவியில் குளிப்பது இது இரண்டாவது முறை. இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்ப...