முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடுநின்ற நடுவாய்!

ராஜ் கௌதமனின் "கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக" - நூல் விமர்சனம்   எனக்கு நினைவு தெரிந்து நான் முதன் முதலாகக் கற்றுக்கொண்ட பாடல் வள்ளலாரின் “ஒருமையுடன் நினது திருமலரடி” என்ற பாடல் தான். என்னுடைய தாத்தா வள்ளலார் வழி நடப்பவர். விவரம் புரியாத வயதிலிருந்தே வள்ளலார் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது. அவர் குறித்து நான் அதிகம் அறிந்துகொண்டதும் விவாதம் செய்ததும் என் தாத்தாவிடம் தான். தாத்தா தத்துவ நிலையில் விளக்குவார். நான் உலகியல் காரணங்களை அடுக்குவேன். வள்ளலார் பற்றிய பெரும்பாலான நூல்களை தாத்தா சேகரித்து வைத்திருக்கிறார். அப்படித்தான் மூன்றாண்டுகளுக்கு முன் ராஜ் கௌதமன் அவர்கள் எழுதிய “கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக” என்ற நூலை வாங்கி வந்தார். நான் ராஜ் கௌதமனின் “லண்டனில் சிலுவைராஜ்” என்ற நாவலை முன்பே வாசித்திருந்தேன். இந்த நூல் வள்ளலார் பற்றிய வழமையான கட்டுரை நூலாகவே இருக்கும் என்று நினைத்தே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் இது மிக முக்கியமான ஆய்வு நூல் என்பதை வாசித்த பின்பு உணர்ந்தேன். ஒரு சிந்தனையாளனை அவனுடைய சமூகம் தான் உருவாக்குகிறது. தன்னுடைய அக அறிதல் மூலமா...

கரைந்த நிஜம்!

கரைந்த நிழல் - குறும்படம் குறித்து. சமீபகாலமாக குறும்படங்கள் பார்ப்பதைத் தவிர்த்து வந்தேன். காரணம் குறும்படம் என்ற பெயரில் ஒளிப்படங்களின் கோவையாக பின்னணி இசையுடன் வெறும் குப்பைகளை யூ-டியூப் போன்ற தளங்களில் கொட்டி வைத்திருக்கிறார்கள். மாநில, தேசிய, சர்வதேச விருதுகள் பெற்ற குறும்படங்கள் என்று தம்ப் நெயிலில் எழுதி இருக்கிறார்கள். அதை நம்பி உள்ளே சென்று பார்த்தால் அதற்கான எந்த அறிகுறியும் இருப்பது இல்லை. ஒரு குறும்படத்திற்கான வடிவ ஒழுங்கு இல்லாமல் இருக்கும் இவை எங்கு, எப்படி விருது பெற்றிருக்கும் என்பதை நினைத்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். குறும்படம் என்பதை  சிறுகதையோடு ஒப்பிடலாம். நாவலுக்கும் சிறுகதைக்கும் இருக்கக் கூடிய மிக முக்கியமான வேறுபாடு என்பது உச்சகட்ட தருணங்களின் எண்ணிக்கை. நாவலில் பல உச்சகட்ட தருணங்கள் இருக்கும். ஆனால் சிறுகதையில் ஒரே ஒரு தருணம் தான் உச்சகட்ட தருணமாக இருக்கும். இதை அப்படியே குறும்படத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். குறும்படத்தில் ஒரே ஒரு உச்சகட்ட தருணம்தான் இருக்கும். அதை நோக்கியே அந்த குறும்படம் நகரும். ஆனால் பல ஆண்டு காலமாகவே குறும்படத்தின் இந்...