20000 பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்பது 2025ஆம் ஆண்டு
தொடங்கியபோது நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி. அனால் வாசித்தது 13000 பக்கங்கள் மட்டுமே. குறைந்தபட்சம் 100 நூல்களாவது வாசிக்க வேண்டும் என்று இலக்கு
வைத்திருந்தேன். அதை எட்ட முடியவில்லை. 2025-இல் மொத்தம் 71 நூல்களே
வாசித்திருக்கிறேன். இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டை விட சற்று
அதிகம் என்றாலும் வாசிப்பில் நிறைவு ஏற்படாத ஆண்டு.
இந்த ஆண்டு கவிதை நூல்களை கணிசமாக வாசித்திருக்கிறேன். குறிப்பாக
கல்யாண்ஜியின் கவிதைகள். நாவல் வாசிப்பு மற்றெந்த ஆண்டையும்
விட இந்த ஆண்டு சற்று குறைவுதான். எண்ணிக்கை அதிகம் என்றாலும் நூல்களின் தகுதியின் அடிப்படையில் சிறந்த
நாவல்கள் அதிகம்
வாசிக்கவில்லை. இந்த ஆண்டின் மத்தியில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில்
ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா போன்றவர்களே என்னை அதிலிருந்து வெளியேற்றி சற்று
இளைப்பாற்றினர் என்று சொல்லலாம்.
வாசித்த இந்த 71 நூல்களில் சில நூல்கள் குறித்து விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். உதாரணத்துக்கு க.நா.சு.வின் ‘படித்திருக்கிறீர்களா’, எம்.ஜி. சுரேஷின் ‘யுரேகா என்றொரு நகரம்’, சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடனமங்கை’, கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘கொமறு காரியம்’, கி.அ.சச்சிதானந்தத்தின் ‘உயிரியக்கம், ‘புதுமைப்பித்தனின் சம்சார பந்தம்’, சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’, மருத்துவர் ஷாலினியின் ‘அர்த்தமுள்ள அந்தரங்கம்’ போன்றவை. ஆனால் எழுதுவதற்கான உளம் இந்த ஆண்டு அமையவே இல்லை.
2026 ஆம் ஆண்டு 25000 பக்கங்களாவது வாசிக்க வேண்டும் என்பது இலக்கு. பல முக்கியமான
நூல்கள் வாசிப்பு பட்டியலில் இருக்கின்றன. பார்ப்போம். எண்ணிய முடிதல் வேண்டும்!
இந்த ஆண்டு வாசித்த நூல்களின் பட்டியல் கீழே:
நாவல்கள்:
1.
செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை
2.
அன்னா - வாசு முருகவேல்
3.
பொண்டாட்டி - அராத்து
4.
யுரேகா என்றொரு நகரம் - எம்.ஜி.சுரேஷ்
5. பத்து செகண்ட்
முத்தம் – சுஜாதா
6.
எதையும் ஒருமுறை – சுஜாதா (மீள் வாசிப்பு)
7.
சில்வியா – சுஜாதா
8.
கடலோரக் குருவிகள் – பாலகுமாரன்
9.
காற்றோடு ஒரு யுத்தம் - இந்திரா சௌந்தர்ராஜன்
10. நாகவனம் -
இந்திரா சௌந்தர்ராஜன்
11. திருவண்ணாமலை -
இந்திரா சௌந்தர்ராஜன்
12. ஆத்மா - இந்திரா
சௌந்தர்ராஜன்
13. புருஷ வேட்டை -
இந்திரா சௌந்தர்ராஜன்
14. கிரைம் - ரா.
கி. ரங்கராஜன்
15. ஜரிகை மேடை -
பட்டுக்கோட்டை பிரபாகர்
16. உயிர் விடு தூது
- ராஜேஷ் குமார்
17. தூரத்து துரோகம்
- ராஜேஷ்குமார்
18. வினோத் ஒரு
வினாக்குறி - ராஜேஷ் குமார்
19. ஒரு ஃபைவ்
ஸ்டார் துரோகம் – ராஜேஷ்குமார்
20. ரத்த ராஜ்ஜியம் –
ராஜேஷ்குமார்
21. நிற்காத நிழல்
ஒன்று – ராஜேஷ்குமார்
22. மற்றொரு நாள் –
ராஜேஷ்குமார்
23. இலவசம் ஒரு
வானவில் – ராஜேஷ்குமார்
24. அன்று நிர்மலா
இன்று பரிமளா – ராஜேஷ்குமார்
25. முள் நிலவு -
ராஜேஷ்குமார்
26. இரவல் காதலி -
செல்லமுத்து குப்புசாமி
சிறுகதை தொகுப்பு:
27. மறியா
தாமுவுக்கு எழுதிய கடிதம் - சுந்தர ராமசாமி
28. நடன மங்கை -
சுரேஷ்குமார இந்திரஜித்
29. கொமறு காரியம் -
கீரனூர் ஜாகிர்ராஜா
30. உயிரியக்கம் -
கி.அ. சச்சிதானந்தம்
31. முதல் குரல் -
பாரதி பாஸ்கர்
32. அம்மாவின் டைரி
- குடந்தை பிரேமி
33. தியாகம் தந்த
பரிசு - டாக்டர் அருட்கவி அரங்க. சீனிவாசன்
கட்டுரை தொகுப்பு:
34. எனது பயணம் -
அப்துல் கலாம்
35. தொல்காப்பியப் பூங்கா – கலைஞர் மு. கருணாநிதி
36. தாடகை
மலையடிவாரத்தில் ஒருவர் – ஜெயமோகன்
37. புதுமைப்பித்தனின்
சம்சார பந்தம் - கமலா புதுமைப்பித்தன்
38. படித்திருக்கிறீர்களா? – க.நா. சுப்ரமணியம்
39. அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே – எம்.ஜி. சுரேஷ்
40. சடங்குகளின் கதை
- அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
41. சொன்னால்
நம்பமாட்டீர்கள் - சின்ன அண்ணாமலை
42. கிரிப்டோ
கரன்சி: ஓர் அறிமுகம் - நா. கோபாலகிருஷ்ணன்
43. ஏறிக் குதிக்க
ஓர் ஏழடிச் சுவர் - பாரதி பாஸ்கர்
44. தொட்டதெல்லாம்
பொன் - சோம. வள்ளியப்பன்
45. பண வாசம் - குரு
மித்ரேஷிவா
46. தயங்குவது ஏன்
இன்னும் - முருகு தமிழ்
கவிதைகள்:
47. விதானத்துச்
சித்திரம் - ரவி சுப்பிரமணியன்
48. பிக்பாஸ்
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் - மனுஷ்யபுத்திரன்
49. இடமும்
இருப்பும் - மனுஷ்யபுத்திரன்
50. பூனை எழுதிய அறை
- கல்யாண்ஜி
51. என் ஓவியம்
உங்கள் கண்காட்சி - கல்யாண்ஜி
52. மூன்றாவது முள்
- கல்யாண்ஜி
53. மீனைப் போல
இருக்கிற மீன் – கல்யாண்ஜி
54. அந்தரப் பூ -
கல்யாண்ஜி
55. நொடி நேர அரை
வட்டம் – கல்யாண்ஜி
56. புலரி -
கல்யாண்ஜி
57. வீட்டிற்கு
வெளியே வெவ்வேறு சுவர்கள் - யுகபாரதி
58. மழைப்பேச்சு -
அறிவுமதி
59. மூன்றாம் நாள்
பெண் - கண்மணி குணசேகரன்
60. சாளரக் கனவுகள் –
குடந்தை பிரேமி
அரசியல், வரலாற்று நூல்கள்:
61. கறுப்பு வெள்ளை
- பாலு சத்யா
62. மோடியின்
இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை ஆர் வெங்கடேஷ்
63. சாமிகளின்
பிறப்பும் இறப்பும் - ச. தமிழ்ச்செல்வன்
64. மார்க்ஸ்
என்னும் மனிதர் - என். ராமகிருஷ்ணன்
65. தக்கர்
கொள்ளையர்கள் – இரா. வரதராஜன்
மனநலம்/மருத்துவ நூல்கள்:
66. குழந்தை
வளர்ப்பு அறிவியல் - ஸ்டீபன் ருடால்ப்
67. அர்த்தமுள்ள
அந்தரங்கம் – Dr. ஷாலினி
68. உயிர்மொழி – Dr. ஷாலினி
69. உணர்ச்சிகள்: பாகம் 1 - Dr. நாராயண ரெட்டி
சினிமா:
70. நகரங்களே சாட்சி – எஸ். ராமகிருஷ்ணன்
71. இலக்கிய
சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - பேராசிரியர் கு ஞானசம்பந்தன்


கருத்துகள்