முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியும் இடைவிடா இருமலும்


வடமொழியால் பட்ட பாடு போதும் என்ற மன நிலையில் இருந்த தமிழர்களுக்கு அடுத்த தலைவலியாய் வந்து சேர்ந்தது இந்தித் திணிப்பு. இந்தியை இந்தியா முழுவதும் கட்டாயமாக்கிய நேரு பலத்த கண்டனத்துக்கு உள்ளானார். திராவிட இயக்கங்களும் மாணவர்களும் தமிழக மக்களும் வீதியில் இறங்கி தங்கள் மொழிக்காகப் போராடியது இந்தியை கட்டாயத்திலிருந்து விருப்பத்துக்கு கொண்டு சென்றது. அந்த 1960களிலிருந்து இந்தியை ஊடுருவ விடாமல் இரும்புத்திரைப் போட்டு பாதுகாத்து வருகின்றனர். எனினும், அமைதியாக மக்கள் இந்தியின் மீது ஈர்ப்பு கொண்டுள்ளனர் என்பதும் உண்மை. அதன் வெளிப்பாட்டை இரண்டு வாரங்களுக்கு முன்னால் (ஆகஸ்ட் 9, 10 தேதிகளில்) தஞ்சை உமா மகேஸ்வரனார் கல்லூரியில் கண்டேன். . 

தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா என்ற அமைப்பு தென் இந்திய மக்கள் இந்தி கற்க அருமையான பாடத் திட்டதோடு  எட்டு தேர்வு நிலைகளில் இந்தியைக் கற்றுத் தருகின்றனர். இந்த அமைப்பு 1918 - ஆம் ஆண்டு காந்திஜியால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டை நெருங்கினாலும் இந்த அமைப்பின் நோக்கம் சமீப காலமாகத்தான் சொல்லிக்கொள்ளும்படி நிறைவேறியுள்ளது. இப்போது எழுதிய தேர்வு ஐந்தாவது நிலை. 'விஷாரத் பூர்வார்த'. இன்னும் மூன்று தேர்வுகள் முடித்தால் B.A (Hindi) என்று போட்டுக்கொள்ளலாம். 

செமஸ்டர் தேர்வுக்கு முதல் நாள் ஓர் இரவு மட்டும் படித்தே பழகிவிட்டதால் இந்தத் தேர்வுக்கும் அதையே செய்தேன். தேர்வு நாளன்று திருவிழா போன்ற கூட்டத்தை கண்டு ஆச்சர்யப்பட்டேன். பிராத்தமிக் தேர்வுக்கு இந்த கூட்டம் இருந்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. அது முதல் நிலை. ஆனால், ஐந்தாம் நிலைத் தேர்வைக் கூட இவ்வளவு பேர் எழுதுவது வியப்புதான். இந்தியின் மீது ஆர்வம். 2000 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள், வகை வகை வாகனங்கள், பரபரப்பு, படபடப்பு, அறை எண்ணை கண்டுபிடிக்கக் காட்டிய அவசரம் எல்லாம் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. 
ஆனால், பெற்றோர்கள் அக்கரைப்படுவதாக கொஞ்சம் அதிகமாகவே மற்றவர்களுக்கும் இடையூறு செய்தனர்.

பத்து மணிக்கு தேர்வு தொடங்கிய பிறகும் அறைக்கு வெளியே நின்றுகொண்டு உள்ளே இருக்கும் தங்கள் பிள்ளைகளுடன் சத்தமாகப் பேசினர். அங்கிருந்து நகரச் சொன்ன ஆசிரியருக்கும் பெற்றொருக்கும் வாக்குவாதம் நடந்தது. தேர்வு முடியுமுன்பே அறைக்கு வெளியே வந்து நின்று "எல்லாக் கேள்வியும் எழுதிருக்கியா? ஈசியா இருக்கா? ஜெனரல் எஸ்ஸே என்ன கேட்டிருக்கான்?" என்று வெளிவந்த பின்பு கேட்க வேண்டியதை முன்னமே கேட்டது என்னைப் போல் தேர்வு எழுதிய மற்றவர்களையும் எரிச்சலாக்கியது. 

பெற்றோர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளின் கல்வியின் மேல் அவர்கள் அக்கறை எடுத்துக்கொள்வது மகிழ்ச்சியானது என்றாலும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் நடந்துகொள்வது சரியல்ல. இவர்களில் படித்த, நல்ல பணியில் இருப்பவர்கள்தான் அதிகம் என்பது கொஞ்சம் சிந்திக்கவேண்டியது. ஆங்கிலத்தில் 'etiqutte' என்றொரு சொல் உள்ளது. தமிழில் இங்கிதம் என்பர். அந்த இங்கிதம் தெரிந்து நடந்துகொள்ள வேண்டும். எல்லோரும் கத்துவதால் எளிமையாக கண்டுபிடிக்கக்கூடிய அறைகளைக் கூட சிரமப்பட்டு கண்டறிகிறார்கள்.  பிரச்சார சபாவும் மாணவர்கள் எளிதாக தங்கள் அறையைக் கண்டுபிடிக்கவும் அங்கே செல்ல வழி காட்டவும் தனியே சில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் சிரத்தைக் காட்டினால் இந்தத் தேர்வுகளை இன்னும் சிறப்பாக நடத்தலாம். 

இந்தி இந்தியாவின் ஒரு மொழி என்ற அளவில் அதை கற்றுக்கொள்வது தவறில்லை. மொழிப் பயிற்சி என்பது அறிவு சார்ந்ததல்ல. அது திறன் (Skill) சார்ந்தது. எந்த மொழி கற்றாலும் தன் தாய் மொழியை நேசித்து அதையே தன் நாட்டில் பேசி, பயன்படுத்தி தேவைப்படும்போது மட்டும் மற்ற மொழிகளைப் பயன்படுத்தினால் திணிப்பு என்ற ஒன்று வராது. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்பதெல்லாம் இன்றைய உலகத்தில் நடக்காத விஷயம். எனவே, எல்லா மொழிகளையும் எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்வதுதான் நாம் அறிவில் வளர்ந்திருக்கிறோம் என்பதற்கான அறிகுறி.  அந்தப் பக்குவம் வர முயற்சி எடுப்போம். 

சரி....தலைப்பில் இருமல் என்று சொல்லியிருந்தேனே?? அது என்ன என்று யோசிக்கிறீர்களா? இந்தத் தேர்வில் பெற்றோர்களோ ஆசிரியர்களோ செய்ததை விட எனக்கு மிகப்பெரிய தொந்தரவாக இருந்தது என்னுடைய இருமல். அமைதியாக இருந்த தேர்வறையில் சளியை அடித் தொண்டை
யிலிருந்து மேலெழுப்பும் முயற்சியாய் நான் இருமிய இடைவிடாத இருமல் தான் எனக்கும் மற்றவர்களுக்கும் பெரும் தொந்தரவாக இருந்தது.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
overalla ithula enna solla varinga mr.dheenadhayalan hindi exam commitiku anupavendiya complaint lettera potrukinga rendu concept solringa pathathu ungaltaa inum neraya ethirpakuran!!!!!!!!!!!!!
Tamilyuvapriyan இவ்வாறு கூறியுள்ளார்…
nalla irukuda,good.keep it up.itha padikum bothu enaku iraianbu saayalum sujatha saayalum parthen.but its unique.ivanuku vera vela ila kurai solrathula munadi nikran.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...